அங்கிள் ஆக்கிய ஆன்ட்டி
நேற்று ஆதார் கார்டு
விண்ணப்பிப்பதற்காக , சேலம் வட்டார ஆட்சியர் அலுவலகத்திற்குச்சென்று வீடு திரும்புவதற்காக
3 ரோடு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன் . என் நேரமோ என்னவோ , வழக்கம்போல
ஒருமணிநேரம் ஆகியும் பஸ் வரவில்லை . கடுப்புடன் நின்றுகொண்டிருந்த நேரம் , என் அருகில்
ஒரு பெண்மணி வந்தார் . அவர் கையைப்பிடித்தவாறே ஒரு ஐந்துவயது பெண்குழந்தையும் , ‘ம்மா
ச்சாக்கி மா’ என்றவாறு அவளின் இடுப்பில் 3 வயது பெண்குழந்தையும் இருந்தன . நின்று கொண்டிருந்த
குழந்தையோ ‘மா ஐஸ்கிரீம் வாங்கித்தா மா’ என்று கெஞ்ச , இந்த பெண்மணியோ அடித்துவிடுவேன்
, அப்பாவிடம் சொல்லிவிடுவேன் , சளி பிடித்துக்கொள்ளும் என்று ஏதேதோக் கூறி அக்குழந்தைகளின்
ஆசைக்குத்தடை போட்டார் . எப்போதும் பெண்குழந்தைகளின் மழலை மொழிகளை உன்னிப்புடன் கவனிக்கும்
எனக்கு , அக்குழந்தைகளின் வாடியமுகத்தைப்பார்த்தபோது பேசாமல் நாமே ஐஸ்கிரிம் வாங்கிக்கொடுக்கலாமா
என தோன்றியது . அச்சோ அப்படி ஏதாவது நாம் செய்து அந்த பெண்மணி திட்டிவிட்டால் என்னசெய்வது
என்று பயந்தவாறே நான் என் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு நின்றுகொண்டிருந்தேன் . அப்போதுதான்
நான் ஒன்றை கவனித்தேன் . நான் அவ்வளவு நேரம் அக்குழந்தைகளை கவனித்துக்கொண்டிருந்ததுபோல்
அப்பெண்மணியும் அவ்வப்போது என்னை பார்த்துகொண்டிருந்தார்
. என்னடா இது வம்பா போச்சு ? நம்மள தப்பா நினச்சிட்டாங்களோ என்று மனதுக்குள் நினைத்தவாறே
அவ்விடத்தை விட்டு சிறிதுதூரம் தள்ளி நின்றேன் . அதன்பின்னும் அந்த பெண்மணி என்னையே
பார்த்தவாறே ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார் . சரி , சனியன் மடியில ஏறப்பாக்குது ! பஸ்
வந்தா எஸ் ஆகிடவேண்டியதுதானென்று நான் படபடப்பாக ஆரம்பித்தேன் . அதேநேரம் உள்ளுக்குள்
ஒரு பெருமிதம் . ஆஹா , நம்மை ஒருத்தி சைட் அடிக்கறாளே !
சில நிமிடங்களுக்குப்பின்
அவள் யாருக்கோ போன் செய்தாள் . அவளின் பேச்சுகளை கேட்க நான் பெரிய பிரயத்தனம் செய்ய இயலவில்லை . ஆனால்
அவளின் கணீர் குரல் , அங்கிருக்கும் எல்லாருக்கும் கேட்டிருக்கவேண்டும் . அவள் பேசியதில்
இருந்து , அவளது கணவனை இங்கு வா என்று அவள் கட்டளையிட்டது நன்றாக தெரிந்தது . பெரிய
பஜாரியாகத்தான் இருப்பாள் போல என்று என்னுடைய மொபைலை எடுத்து , அக்னி-6 ஏவுகனைக் கணக்காய்
மெனுவுக்குள் மிக வேகமாக சென்றேன் . அப்போது என் செவியை நோக்கி ‘நீ மெக்னேஷ் தான ’
என்ற குரல் வந்தது .
குரல் வந்த திசையைப்பார்த்தபோது
, அந்த பெண்மணி என்னருகில் நின்றிருந்தாள் . என்னடா இது ? நம்மபேரு இவங்களுக்கு எப்படித்தெரியும்
? ஒருவேள நம்மோட பதிவுகள்லாம் ரசிச்சு படிக்கற (!?) பெண் ரசிகையா இருப்பாங்களோ
(!!!) என்ற அபத்தமான சிந்தனையும் வந்தது . மங்கையர் மனதைத்தொடும் படியான படைப்புகளை
இதுவரை நாம் எழுதியதே இல்லையே என்று யோசிக்கும் போதே , என் யோசனையைக்கலைக்கும் வண்ணம் அவளின் கணீர் குரல்
மீண்டும் என் காதில் ஒலித்தது .
‘ஆமாங்க ! நீங்க
?’
‘ஹேய் . என்ன அடையாளம்
தெரியலையாடா ? நான்தான் ***** . நாம ரெண்டுபேரும் ஒண்ணாவதுல இருந்து ஐஞ்சாவது வரைக்கும்
ஒன்னா படிச்சமோ ! மறந்துட்டியா ?’ என்றாள் .
ம்க்கும் . என்னுடன்
காலேஜ் படித்த நண்பர்களையே குத்துமதிப்பாய்த்தான் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறேன்
. இன்னமும் மகேஷ் என்ற பெயரில் இருக்கும் மூன்று நண்பர்களின் போன் கால்களை ஒருமுறைக்கூட
சரியாய் அடையாளம் கண்டுபிடித்து கிடையாது. இவளோ கி.முவில் ஒன்றாய்ப்படித்தோம் என்கிறாளே
! யாராயிருக்கும் இவள் என்று நினைக்கும்போதே அவளின் கன்னத்தில் இருந்த தழும்பைப்பார்த்தேன்
. ஆம் அது நான் உருவாக்கியதே தான் ( உடனே தப்பா நினைச்சுடாதிங்க) . அவளுடன் நான் படிக்கும்போது
, ஒருமுறை புள்ளுக்குச்சி விளையாடி அவளின்
கன்னத்தில் ஓட்டையைப்போட்டுவிட்டேன் . ஆம் அந்த எலும்பும்தோளுமாய் , கைசூப்பிக்கொண்டு
, ஜவ்வுமிட்டாய் உதட்டில் வழிந்தோட சாப்பிட்ட அவளே தான் இன்று இருகுழந்தைகளின் தாயாய்
என்முன்னே காட்சியளிக்கிறாள் . ஐந்தாவது முடித்தவுடன் நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
படிக்கச் (?) சென்றதால் , அதன்பின் என் பால்யகால காதலிகளை காணமுடியாமல் போய்விட்டது
. அதில் ஒருத்திதான் இவள் .
‘ எப்படி இருக்க
***** ? ‘
‘ம் நல்லா இருக்கேன்
. நீ என்ன செய்ற ’ என்று அவள் கேட்க , அவள் ‘ஓ’ என்று சொல்லவேண்டும் என்று என்னுடைய
நிலைமையைக்கொஞ்சம் அதீதப்படுத்திக்கூறினேன் . பரஸ்பர பேச்சுகள் முடிந்த நிலையில் நான்
கண்டுபிடித்தது எட்டு வருடங்களுக்குமுன் அவளுக்குத்திருமணம் நடந்திருக்கிறது . அந்நேரங்களில்
நான் ஜெட்டிக்ஸ் சேனலில் பஸ் லைட்யர் கார்ட்டுன் பார்த்துக்கொண்டிருந்தேன் . அவளது
கணவன் , சொந்தமாக வெள்ளிப்பட்டறை வைத்திருக்கிறான் .
அதன்பின் அவளின்
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் , சாக்லேட் எல்லாம் வாங்கிக்கொடுத்தேன் . அப்போது அக்குழந்தைகள்
அவளிடம் நான் யாரென்று கேட்க ,
‘இவரு உங்க சித்தப்பா
மா’ என்றாள் . இருகுழந்தைகளைப்பெற்றெடுத்த
அவள் ஆண்டியானால் பரவாயில்லை . இன்னும் கல்யாணமே ஆகாத நான் அங்கிள் ஆகிவிட்டேனே L ! அக்குழந்தைகளின் மாமா என்று கூறியிருந்தால்
கூட சந்தோஷமாய் இருந்திருப்பேன் . அதன்பின் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு என் வீட்டிற்கு
வந்ததும் முதல் தீர்மானமாய் ஒன்றை மனதில் எடுத்தேன் . இனிமேல் எங்கு சிறுவயது திருமணங்கள்
நடந்தாலும் , அதை கவர்மென்ட்டில் போட்டுக்கொடுத்துத் தடுத்துவிடவேண்டும் .
Mama or chithappa whts the difference ?? both r uncle only right ?
ReplyDeleteYa ! in Eng its not prob ! But I feel uneasy to hear that i am Chitthappa !!
Deleteகன்னத்தில் வாங்கிய அந்த பெண்ணுக்கு அது நினைவுக்கு வந்திருக்கணுமே?
ReplyDeleteஅந்த பொண்ணுக்குலாம் நல்ல ஞாபக சக்திணா ! எனக்குத்தான் கொஞ்சம் வீக் !!!
Delete