சலீம் – சினிமா விமர்சனம்
‘நான்’ என்ற சிறந்த
கிரைம்-திரில்லரில் நடித்த விஜய் ஆண்டனியின் இரண்டாம் படம் . படத்தைப்பற்றி பார்க்கும்முன்
, நம்மை கொஞ்சம் நோக்குவோம் . நம்மில் எத்தனை
பேர் , சிக்னலில் 0 SEC எனக்காட்டி , பச்சை சிக்னல் விழுந்தபின் , நம் வாகனத்தை , சிக்னலில்
இருந்து கிளப்பியுள்ளோம் ? ஒன்வே ரோட்டில் , எதிராக ஒருமுறையேனும் பயணிக்காதோர் எத்தனை
பேர் உள்ளனர் ? லஞ்சம் பற்றி வாய்கிழிய கூவும் நாம் , நமக்கென்று ஏதேனும் தேவைப்படும்போது , லஞ்சம் கொடுக்காமல்
இருந்திருக்கிறோமா ?
நாம் சிக்னலை சரியானபடி
பின்பற்ற நினைத்தாலும் , பின்னாலிருப்பவன் விடமாட்டான் . ஓயாமல் ஹார்ன் அடித்து , ஏதேனும்
வசைபாடி விட்டு , சிக்னல் விழும்முன்னே பறப்பான் . அவனின் ஏச்சுபேச்சுகளுக்கு பயந்தே
நம் வாகனத்தை எடுத்துக்கொண்டு , விதிகளையும் மனக்குமுறல்களையும் விழுங்கியபடி செல்வோம்
. நாம் எவ்வளவுதான் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைத்தாலும் , நம்மைச்சுற்றியுள்ள
சமூகம் , அப்படி இருக்கவிடாது . அதையும்மீறி இருப்பவனை , ‘வேஸ்ட் , அட்டு , மொக்கை’
என்று பட்டம் சூட்டி மகிழ்வார்கள் . திடிரென ஒருநாள் நமக்கு இச்சமூகத்தின்மீது கோபமேற்பட்டால் , அமைதியாக
போய் வீட்டினுள் மனதினுள் குமுறிக்கொண்டே உறங்கிவிடுவோம் . அதைத்தட்டிக்கேட்க , நமக்கு
‘மல்டிபள் பெர்சனாலிட்டி டிசார்டரோ’ ‘விதவித
காஸ்ட்யூம் கெட்அப்புடன் , ஆயுதங்களோ’ இல்லை .அதைவிட மிகமுக்கியம் , குடும்பபொறுப்பு.
கதை :
சலீம் , ஒரு அமைதியான
, விதிக்களை பின்பற்றும் அச்சடித்த அக்மார்க் நல்லவன் . டாக்டராக வேலை செய்கிறான்
.பிற உயிர்களுக்கு தீது செய்யாதவன் .அனாதையாக வாழும் அவனுக்கு காதலி கம் வருங்கால மனைவி
கிடைக்கிறாள் .எதிலும் பொறுமையுடன் , மனிதாபிமானத்துடன் இருக்கும் சலீமை , நாள் செல்ல
செல்ல அவள் வெறுக்கிறாள் . ஒருகட்டத்தில் ,’நீ ரொம்ப நல்லவன்’. சோ நாம பிரிஞ்சிடலாம்னு
அசால்டாக சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறாள் .இன்னொரு பக்கம் , சலீம் வேலை செய்யும் மருத்துவமனையில்
, அவனை டிஸ்மிஸ் செய்துவிடுகிறார்கள் . கோபத்தில் சரக்கடித்து , ஹாஸ்பிட்டல் எம்.டியையும்
அவரின் அல்லகைக்களையும் அடித்துவிட்டு , ரோட்டில் கத்திக்கொண்டே செல்கிறார் . ஒன்வேயில்
வரும் ஒருவனிடம் ரூல்ஸ் பேச , அவனோ போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் .ஸ்டேசனில் அவனை வைத்திருக்க
, சலீமின் காதலியின் தகப்பனாரிடம் இருந்து
போன் வர , வேறுவழியின்றி ஸ்டேசனை விட்டு எஸ் ஆகிறார் . மீண்டும் போலிஸ்பிடியில்
மாட்ட , அந்த எஸ்.ஐ யோ , உனக்கு இரண்டு வருடம் ஜெயில் தான்டியோய்னு மிரட்ட , மனுஷன்
காண்டாகி , எஸ்ஐயை அடித்துபோட்டு அவனின் துப்பாக்கியை லபக்கிவிட்டு , எஸ் ஆகிறார்
. இரண்டு ஆண்டுகள் ஜெயிலில் வாழ்வதற்குபதில் , ஒரே ஒரு நாள் , நமக்குபிடத்தமாதிரி நாம்
வாழலாம் என்று முடிவெடுக்கிறார் . தப்பித்து நேராக ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார் .4 பசங்களை
கடத்துகிறார் . அதில் ஒருவன் , உள்துறை அமைச்சரின் மகன் . அவர்களை எதற்காக கடத்தினார்
? கடத்தி என்ன டிமான்ட் செய்கிறார் ? அந்த பசங்களின் கதி என்ன ? கடைசியில் , ஹீரோ என்ன
ஆனார் ? என்பதே படத்தின் மிச்சமீதி கதை .
இப்போது வரும் படங்களில்
முதல்பாதியில் செலுத்தும் கவனத்தை , இரண்டாம் பாதியில் படுக்கவைத்துவிடுகிறார்கள்
.ஆனால் , இப்படத்தில் , முதல்பாதியில் ஏனோதானோவென்று இழுத்து இரண்டாம் பாதியில் நன்றாக
கொண்டு சென்றுள்ளார்கள் .படத்தில் இசை மிகச்சுமார் ரகமே . ஒரே ஒரு குத்து பாட்டும்
, ஒரு மெலடியுமே மட்டுமே ஓகே ரகமாக உள்ளது .பிண்ணனி இசை முழுமையும் ‘நான்’ படத்தில்
வரும் இசையே . திரைக்கதை , முதல்பாதியில் மிக மெதுவாக நகருவதால் , கொஞ்சம் அலுப்பு
தட்டிவிடுகிறது. ஒளிப்பதிவு ஓ.கே ரகம் . ஹீரோயின் என்ற பெயரில் திரிஷாவையும் , சோனாவையும்
கலந்து கட்டிய ஒரு ஆன்டியை நடிக்கவைத்துள்ளார்கள் . அவரின் மேக்கப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம்
.கண்ணால் , காண முடியவில்லை. விஜய் ஆன்டனி வழக்கம்போல , ஒரு மெலோடி பாடலில் , ஆஸ்கார் வாங்கிய ஏ.ஆர் .ரஹ்மானை போல ,
கையை மெதுவாக வானத்தை நோக்கி டான்ஸ் நடக்கிறார் . ‘உர்’ ரென்று படம் முழுவதும் முகத்தை
வைத்தபடியே வருகிறார் .
மொத்தத்தில் ,
மிகச்சுமாரன படம்
தான் .கிளைமேக்ஸ் வரும்முன்னே , நாமே யூகித்துவிடலாம் . முன்பாதி , கொஞ்சம் டல்லாக
சென்றாலும் பின்பாதி ஓ.கே ரகம் . ’நான்’ போன்ற கிரைம்-திரில்லர் எதிர்பார்ப்பில் சென்றால்
, கடுப்பாக , வாய்ப்புகள் அதிகம் . அவசியம் பார்க்கவேண்டியதில்லை. வேறுவழியில்லையெனில்
பார்க்கலாம் .
Thanks for passing the information buddy..stay sharing
ReplyDeleteThanks For ur comment Dude !!!
DeleteThanks for review..nanbare
ReplyDeleteநன்றி ணா!!!
Delete:-)
ஆக... அலட்டிக்காம இ.தொ.காட்சிகளில் முதல் முறையா வரும்போது பாத்துக்கலாம்ங்கறீங்க. குட்டு....
ReplyDeleteஆமாங்ணா !! (நீங்க சொன்னமாதிரியே சின்னதா எழுதிட்டேன்னு நினைக்கிறேன் ணா!!)
Delete